நாகை வர்த்தக குழுமம் சார்பில் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சேம்பரில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொருவரும் நாகை தொகுதிக்கு செய்ய வேண்டிய திட்டங்கள்,பணிகள் குறித்து கருத்துக்கள் கூறினர். அவர்களுக்கு மத்தியில் ஏற்புரை நிகழ்த்திய M.தமிமுன் அன்சாரி.MLA அவர்கள், நாகப்பட்டிணத்தில் தொகுதி ஆலோசனைகுழு அமைக்கப்படுகிறது.இதில் வர்த்தக குழுமத்தின் தலைவரும் இடம் பெறுவார். இக்குழு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கூடும்.அதில் தொகுதி பணிகள் யாவும் கண்காணிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என அறிவித்தார்.நாகையின் தொகுதியின் வளர்ச்சி,சேம்பரின் வழிக்காட்டல்படி முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார். -தகவல் - நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
Author: admin
காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்டித்து மஜக சார்பில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் !
மஜக தலைமையகம் அறிவிப்பு ! ============================ காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்டித்து மஜக சார்பில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, திருவாரூர் , கடலூர், திண்டுக்கல், ஈரோடு, வேலூர் ஆகிய பத்து மைய்யங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் . வருகின்ற ஜூலை 22 வெள்ளி, ஜூலை 23 சனி, ஜூலை 24 ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில், தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்படும். ஜனநாயக வழியில் நடைபெறும் இப்போராட்டத்தில். பொது மக்களுடன் சமூகநீதி போராளிகளும், மனித உரிமை ஆர்வளர்களும் பங்கேற்பர் இவண்: M.தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 18/07/2016
உடைந்த படகுக்கு நஷ்டஈடு தேவை ! காரைக்கால் மார்க் துறைமுகத்துடன் நாகை MLA பேச்சுவார்த்தை !
இன்று காலை நாகை மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும்போது,காரைக்கால் மார்க் துறைமுகத்துக்கு வந்த வெளிநாட்டு கப்பல் ஒன்று மீனவர்களின் படகின் மீது மோதியதில்,படகு முற்றிலும் சேதமடைந்தது.மேலும் 7 மீனவர்கள் மருத்துவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்து நாகை தொகுதி மீனவ பஞ்சாயத்து தலைவர்களும்,நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி.MLA உள்ளிட்டவர்களும் மார்க் துறைமுக தலைமையகத்திற்கு சென்றனர். அங்கு துறைமுக பொறுப்பு அதிகாரிகளுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.மார்க் துறைமுகத்திற்கு வரும் கப்பல்களால் இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடக்கின்றன. இப்போது நடந்த விபத்துக்கு,மார்க் துறைமுக நிர்வாகம் பொருப்பேற்று,நஷ்டஈடு பெற்று கொடுக்க வேண்டும் என தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து சம்மந்தப்பட்ட கப்பல் நிர்வாகம் மற்றும் ஏஜன்சியுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும்,நாளை மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகவும்,துறைமுக நிர்வாகி ரெட்டி கூறினார். பிறகு பாதிக்கப்பட்ட மீனவர்கள்,நாகை அரசு மருத்துவமனையில் சேரக்கபட்டிருந்தனர்.அவர்களை MLA அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்குமாறும் மருத்துவர்களிடம் கேட்டுகொண்டார். -தகவல் : நாகை சட்டமன்ற தொகுதி அலுவலகம்
நாகை ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைப்பு
நாகை மீனவர் பஞ்சாயத்து சார்பில் மஜகவுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதில் மத்திய அரசுடன் சமீபத்தில் பேசியிருப்பதாகவும் , அவர்கள் துரித நடவடிக்கையை மேற்கொள்ள விருப்பதாகவும் , எனவே தற்காலிகமாக ரயில் மறியலை ஒத்திவைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்கள் . அவர்களின் வேண்டுகோளை ஏற்று 12 – 07 - 2016 அன்று மதியம் நடைபெறவிருந்த மஜகவின் ரயில் மறியல் போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது . இவண் செ.செய்யது ரியாசுதீன் மாவட்ட செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி நாகை தெற்கு மாவட்டம்