திருப்பூரில் 15 வேலம்பாளையம் என்ற பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் பூட்ட வேண்டும் என்று RDO சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது.வெள்ளிக்கிழமை ஜூலை 29 ,மதியம் 3 மணிக்குப் பிறகு அது செயல்படக் கூடாது என சொல்லப்பட்டிருக்கிறது. பள்ளிவாசல் பதிவு அங்கீகாரம் சட்டப்படி இல்லை என்று, அப்பகுதி குடியிருப்பாளர்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இப்படி உத்தரவிட்டுள்ளதாக ,ஆதாரங்களின் அடிப்படையில் RDO கூறியிருக்கிறார். இதனை நேற்று சட்டசபைக்கு வந்து மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA விடம்,பள்ளிவாசல் முத்தவல்லி சேக் அமீர் தலைமையிலான குழு (9786125454) கூறியது. உடனே முதல்வர் அவர்களின் கவனத்திற்கு இப்பிரச்சினையை மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அனுப்பி வைத்தார். நீதிமன்ற உத்தரவு என்றாலும் இது உணர்வுப்பூர்வமான ஒரு பிரச்சினை என்பதால், நடவடிக்கையை கைவிடுமாறு,பதில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அவகாசம் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இதனிடையே இருபுறமும் உள்ள சிலர் இதை கவனமாக அனுகாமல்,உணர்வுகளை தூண்டும் வகையில் நடப்பதாக அதிகாரிகள் வருத்தப்பட்டனர். சில முஸ்லிம் அமைப்புகள் நீதிமன்ற உத்தரவை, ஏதோ அரசு செய்வதுப் போல சித்தரித்து கருத்துக்களை பரப்புவது என்ன நியாயம்? என்றனர். இதற்கு விளக்கமளித்த மஜக பொதுச்செயலாளர், முஸ்லிம்கள் தரப்பில் அப்பள்ளிவாசலில்
Author: admin
இன்று சட்டசபையில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வைத்த கோரிக்கைகள்..
#மறைமலை_அடிகளின்_பெயரால்_தனித்தமிழ்_ஆராய்ச்சி_நிலையம்_வேண்டும்! #முஸ்லிம்கள்_இடஒதுக்கீட்டை_உயர்த்தி_தர_வேண்டும்! #நாகப்பட்டினம்_துறைமுகத்தை_ஆழ்கடல்_துறைமுகமாக_செயல்படுத்த_வேண்டும்! இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MA,MLA., பட்ஜெட் பொது விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பட்ஜெட்டை வரவேற்று பேசிய அவர் : "இது வரியில்லாத பட்ஜெட்; மக்களுக்கு வலி கொடுக்காத பட்ஜெட்; எதிர்தரப்புக்கு வழி கொடுக்காத பட்ஜெட்" என்று பேசியதும் பேரவை உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர், பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு மிகுந்த மதிநுட்பத்தோடு செய்யப்பட்டு இருப்பாதாக கூறியவர், தனது தொகுதி கோரிக்கைகளையும் முன்வைத்தார். மறைமலை அடிகளார் பெயரில் ============================= ஆராய்ச்சி நிலையம் வேண்டும்: தமிழ் வளர்ச்சி துறைக்கு இந்த அரசு அறிவித்துள்ள திட்டங்களையும்,நிதி ஒதுக்கீட்டையும் வரவேற்றவர்,இது தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாக்காலம். எனவே தனிதமிழுக்கு குரல் கொடுத்த, தமிழ் வரலாற்றின் வைரமாக திகழும் ஐயா.மறைமலை அடிகளார் பெயரால்,அவர் பிறந்த நாகப்பட்டினத்தில் நூலகத்துடன் கூடிய தனித்தமிழ் ஆராய்ச்சி மையத்தை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இலங்கை தமிழ் அகதிகள் நலன்: ========================= இலங்கை தமிழ் அகதிகளின் நலனுக்காக தமிழக அரசு செய்து வரும் திட்டங்களையும், நிதி ஒதுக்கீட்டையும் வரவேற்றவர் ,இது உலகமெங்கும் தேசத்தை கடந்த நதிகளாய் வாழும் ஈழத் தமிழர்களுக்கு ஒர் நற்செய்தி என்று பாரட்டினார். மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் அரசு, ஈழத் தமிழர்கள் மீது
திருவிதாங்கோடு ஆக்ஸ்போர்டு பள்ளி நிகழ்ச்சியில் மஜக பொதுச் செயலாளர் உரை …!
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு ஆக்ஸ்போர்டு பள்ளிகூடத்தில் கடந்த 24.07.2016 ஞாயிறு அன்று மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது . பள்ளி தாளாளர் அலிகான் அவர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் . அங்கு வருகை தந்த மஜக பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு பள்ளி முதல்வர் தலைமையில் மாணவ – மாணவிகள் வரவேற்பு கொடுத்தனர் . அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது … இளம் வயதிலேயே நாம் எதற்காக படிக்கிறோம் ? எதை நோக்கி படிக்கிறோம் ? என்பதை சிந்தித்து முடிவு செய்ய வேண்டும் . நமது கல்வி மனிதாபிமான சிந்தனைகளையும் , பிறர் நலம் நாடும் எண்ணங்களையும் வளர்க்க கூடியதாக இருக்க வேண்டும் . நல்ல பண்புகளுடன் கூடிய கல்விதான் வெற்றியை தரும் . வெறும் மனப்பான இயந்திரங்களாக மாறிவிடக்கூடாது . பாடப்புத்தகங்களுக்கு வெளியேயும் வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் . அந்த சிந்தனைகளை ஆசிரியர் – ஆசிரியைகள் பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டும்
தொண்டியில் பேருந்து பணிமனை அமையவேண்டும் ! கருணாஸ் MLA விடம் மஜக வேண்டுகோள் !
திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொண்டியில் முன்பு அறிவிக்கப்பட்ட அரசு பேருந்து பணிமனையை தொண்டியிலிருந்து திருவாடானைக்கு மாற்றக்கூடாது என்றும் , அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் தொண்டியை சேர்ந்த மஜகவினரும் , சமூக ஆர்வலர்களும் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரிMLA அவர்களை தொடர்புகொண்டு பேசினர் . இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் , திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸை சந்தித்து , மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரிMLA தொண்டி மக்களின் கோரிக்கையை விரிவாக எடுத்துக் கூறினார் . இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கருணாஸ்MLA தெரிவித்தார் . மேலும் தேர்தல் வாக்குறுதிப்படி தொண்டியில் ஒரு அரசு கலைக்கல்லூரி அமைய நடவடிக்கை எடுத்தால் , அது அப்பகுதி மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் மஜக பொதுச் செயலாளர் கருணாஸிடம் கோரிக்கை வைத்தார் . - மஜக ஊடகப்பிரிவு
அப்துல் கலாம் ஒரு ஊக்க மருந்து …!
இன்று மேதகு அப்துல் கலாம் அவர்கள் நம்மைவிட்டு பிரிந்து ஓராண்டாகிறது . அவர் வாழும் காலத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை விட , இறந்த பிறகும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார் . இன்று அவருடைய முதலாமாண்டு நினைவேந்தல் நாளில் நாடு முழுக்க ஒருவித ஏக்கம் கலந்த சோகம் இழையோடுவதை உணர முடிகிறது. தொலைக்காட்சிகளில் , F.M ரேடியோக்களில் , சமூக இணைய தளங்களில் , இன்று காலை முதல் அவரது நினைவுகள் ஊட்டப்படுகிறது . நாளிதழ்கள் சிறப்பு கட்டுரைகளை வெளியிட்டுள்ளன . நாடெங்கும் , சிறப்பு கருத்தரங்கள் , நினைவேந்தல் ஊர்வலங்கள் நடைபெறுகின்றன . குறிப்பாக பள்ளி , கல்லூரிகளை சேர்ந்த மாணவ – மாணவிகள் தங்கள் வீட்டில் ஒருவரை இழந்த சோகம் மாறாத உணர்வுடன் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள் . அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி , தனியார் அலுவலகங்களிலும் அவரது நினைவேந்தல் போற்றப்படுகிறது . கட்சி அரசியல் , சாதி - மத அரசியல் , பிராந்திய அரசியல் என எல்லாவற்றையும் கடந்து அவர் போற்றப்படுகிறார் . காந்திக்கு நிகராக ;