ஆக.03.,நேற்று வனத்துறை மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,பல மத கடவுள்களோடு முதல்வர் அவர்களை ஒப்பிட்டு பேசினார்.அதுபோல நபிகள் நாயகத்தையும் ஒப்பிட்டு பேசினார்.அப்போது முதல்வர் அவையில் இல்லை. உடனே முஸ்லீம் லீக் உறுப்பினர் அபூபக்கரும்,மஜக உறுப்பினர் தமிமுன் அன்சாரியும் இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்து சபாநாயகரிடம் ஆட்சேபனையை தெரிவித்தனர். அந்த ஆட்சேபனையை ஏற்று அவற்றை அவைக்குறிப்பிலிருந்து நீக்குவதாக சபாநாயகர் கூறினார்.பிறகு அவை முடிந்ததும் அபூபக்கரும்,தமிமுன் அன்சாரியும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் அப்படி சொல்வது தவறு என்றும் ,அதை முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது என்றும் விளக்கியதும்,அமைச்சர் அதை புரிந்துக் கொண்டு தன் தவறை ஏற்றுக் கொண்டார். இவ்விஷயத்தில் கூட்டணி அரசியல் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு அபூபக்கரும்,தமிமுன் அன்சாரியும் இணைந்து செயல்பட்டது ஆரோக்கியமான அணுகுமுறையாகும். தகவல் :மஜக ஊடகபிரிவு
Author: admin
14ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யுங்கள் .!
14ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யுங்கள் .! #கண்ணீரும்_துயரமும்_வேதனையும்_கலந்த_வார்த்தைகளில்_பேசுவதாக_எடுத்துக்_கொள்ளுங்கள் .! #சட்ட_சபையில்_மஜக_பொதுச்செயலாளர்_M_தமிமுன்_அன்சாரி_MLA_உருக்கம் .! (சிறைத்துறை மானியக் கோரிக்கை மீது 02/08/2016 அன்று மனிதநேய_ஜனநாயக_கட்சியின்_பொதுச்_செயலாளர்_தமிமுன்_அன்சாரி அவர்கள் ஆற்றிய உரை). மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே ... சிறைச்சாலைகள் மானியக் கோரிக்கையில் பேச வாய்ப்பளித்தமைக்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகள் , பெண்களுக்கான 5 தனிச்சிறைகள் உட்பட 138 சிறைச்சாலைகள் உள்ளன . அங்கிருக்கும் கைதிகளின் நல வாழ்வுக்காக மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் அரசு எடுத்து வரும் சிறப்பான திட்டங்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சிறைக் கூடங்களில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் சிறை வாசிகளுக்கு அவர்களது உழைப்பு மதிக்கும் வகையில் அவர்களுக்கான சம்பளத்தை கடந்த அக்டோபர் 2011 முதல் மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் அரசு உயர்த்தியிருக்கிறது. இதற்கு முன்னர் நாள் ஒன்றுக்கு 60 ரூபாய் சம்பளம் பெற்ற ”செயல்திறன் பெற்றோர்” இப்போது 100 ரூபாய் பெறுகிறார்கள். நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் சம்பளம் பெற்ற " ஓரளவு செயல்திறன் பெற்றோர் " இப்போது 80 ரூபாய் பெறுகிறார்கள். நாள் ஒன்றுக்கு 45 ரூபாய் சம்பளம் பெற்ற " செயல்திறன் பெறாதவர்கள் " இப்போது
வரலாறு காணாத மீனவர் நிவாரண நிதி .!
60 லட்சம் பெற்று தந்து மீனவர்களின் துயர் துடைத்த நாகை MLA ஜுலை 12 அன்று நாகப்பட்டினம் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகையை சேர்ந்த ஒரு மீன்பிடி படகு மீது , காரைக்கால் மார்க் துறைமுகத்திற்கு சரக்கு ஏற்றிவந்த கொரிய கப்பல் மோதியதில் படகு உடைந்து 7 மீனவர்கள் பாதிக்கப்பட்டனர் . இச்செய்தி அறிந்ததும் உரிய நஷ்ட ஈடை பெற்றுத்தருமாறு #மஜக பொதுச் செயலாளரும் , நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான M.#தமிமுன்_அன்சாரி அவர்களிடம் கோரிக்கை வைத்ததோடு , அது குறித்த பேச்சுவார்த்தைக்கும் வருமாறு வேண்டுகோள் விடுத்தனர் . இதில் அரசியல் பேதமின்றி பல கட்சிகளை சேர்ந்த மீனவர் பஞ்சாயத்தினர் ஒன்றுபட்டு செயல்பட்டனர் . ஜூலை 13 அன்று காரைக்கால் மார்க் துறைமுக அலுவலகத்தில் அதனுடைய மேலாளர் ரெட்டி , நாகை சட்டமன்ற உறுப்பினர் M.#தமிமுன்_அன்சாரி , மீனவர் கிராம தலைவர்கள் , RDO என அனைவரும் பங்கேற்ற பேச்சுவார்த்தை இரண்டு முறை நடைபெற்றது . அப்போது உடைந்த இரும்பு படகுக்கு நஷ்ட ஈடாக கொரிய கப்பல் நிறுவனம் 60 லட்சம் ரூபாயும் , காயமடைந்த மீனவர்களுக்கு தலா 5 லட்சமும்
மஜகவின் திண்டுக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம்…
மனிதநேய ஜனநாயக கட்சி திண்டுக்கல் (கிழக்கு, மேற்கு) இணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் கூடியது.... தலைமை: K.M. முகமது மைதீன் (உலவி) மாநில துணை பொதுச் செயலாளர் முன்னிலை: திண்டுக்கல் M.அன்சாரி மாநில துணை செயலாளர் கலந்துக்கொண்ட நிருவாகிகள்: A. ஹபிபுல்லா திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் U. மரைக்காயர் சேட் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட போருளாளர் C.A. சாந்து முகமது திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் A.M.சித்திக் ராஜா திண்டுக்கல் மேற்கு மாவட்ட பெருளாளர் S.A .மரிய திவாகரன் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் M. முகமது அனஸ் M.A.B.L., (வழக்கறிஞர்) திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் S.ஹபிபுல்லா (இரயில்வே) திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் ஆகியோர் கலந்துக் கொண்டனர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: 👉1. திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் வரும் 27.08.16 (சனிக்கிழமை) நடைபெறும் "" பொதுக்கூட்டம்"" சிறப்படைய அதிகமான மக்களை அழைத்து வருவது என தீர்மானம். 👉2. திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் பொதுக்குழு கூட்டம் வரும் 03.09.16 (சனிக்கிழமை) நடத்துவது என தீர்மானம். 👉3. திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் பொதுக்குழு கூட்டம் வரும் 5.09.16 (திங்கள்) நடத்துவது என தீர்மானம். 👉4. திண்டுக்கல் கிழக்கு,
தொகுதி மருத்துவ முகாமில் அமைச்சருடன் நாகை MLA பங்கேற்பு!
நாகை தொகுதி மஞ்சக்கொல்லையில் தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற தமிழக முதல்வர் அவர்களின் சிறப்பு முகாமை இன்று அமைச்சர் O.S.மணியன் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியருடன் இதில் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி, முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவல்; நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 30_07_16