சென்னை.மார்ச்.07., குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து 23 நாட்களாக நடைப்பெற்று வரும் ஷாகின்பாக் போராட்டத்தில். இன்று (07-03-2020) மனிதநேய ஜனநாயக கட்சியின் அவைத் தலைவர் நாசர் உமரீ அவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினர். உடன் மாவட்டச் செயலாளர் தாங்கள் தாரிக், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் கதிர் உள்ளிட்ட மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.. தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வடசென்னைமாவட்டம் 07-03-2020
Author: admin
பேராஅன்பழகன் உடலுக்கு மஜக அவைத் தலைவர் நாசர்உமரி நேரில் மரியாதை!
மார்ச் 07, இன்று காலமான திமுக பொதுச் செயலாளர் பேரா. க.அன்பழகன் அவர்களின் உடலுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அவைத் தலைவர் நாசர் உமரீ நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். பிறகு திமுக தலைவர் தளபதி. திரு.ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசினார். அவரிடம் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் தொகுதி நிகழ்ச்சி காரணமாக வர இயலவில்லை என்று கூறி, மஜக வின் சார்பில் ஆறுதலை தெரிவித்தார். அவருடன் மாநில துணை செயலாளர் புதுமடம். அனிஸ், இளைஞர் அணி மாநில செயலாளர் அசாருதீன் ஆகியோர் உடன் சென்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #சென்னை.
குடியுரிமை சட்டங்கள் தொடர்பான வாழ்வுரிமை மாநாட்டு தீர்மானங்கள்! முதல்வரிடம் முதமிமுன்அன்சாரி MLA நேரில் வழங்கினார்!
மார்ச் 07, இன்று நாகப்பட்டினம் ஒரத்தூரில் புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள் நாகைக்கு வருகை தந்தார். விழா முடிந்ததும் மேடையில் அவரை சந்தித்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், கடந்த பிப்ரவரி 29 அன்று கோவையில் மஜக நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட முதன்மை தீர்மானங்களை நேரில் வழங்கினார். தமிழக மக்களின் மன நிலையை மதித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அப்போது நாகை நாடாளுமன்ற தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் MP, திரு.செல்வராஜ் உள்ளிட்டோரும் அருகில் இருந்தனர். இந்நிகழ்வில் மஜக மாநில துணை செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன், பொருளாளர் சதக்கத்துல்லாஹ், துணை செயலாளர் சாகுல் ஹமீது, முபீன் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம்.
பேராசிரியர் அன்பழகன் மரணம், திராவிடஇயக்கத்தின் தீபம் அணைந்தது! முதமிமுன்அன்சாரி MLA இரங்கல்!
தந்தை பெரியாரின் மாணவராகவும், பேரறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பிகளில் மூத்தவராகவும், கலைஞரின் உற்ற நண்பராகவும், திராவிட இயக்க போராளியாகவும் திகழ்ந்த பேராசிரியர் அன்பழகன் அவர்கள் இன்று மறைவுற்றார் என்பது தமிழ் உலகிற்கு ஒரு துயரச் செய்தியாகும். தஞ்சை சமவெளியாம் நாகை மாவட்டத்தில் பிறந்து, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பயின்று, பெரியாரின் ஈரோட்டு பாசறையில் பொதுவாழ்வை தொடங்கியவர். திருவாரூரில் நடைப்பெற்ற மீலாது விழா மாநாட்டில் தான் பேராசிரியர் அன்பழகன் அவர்களும், கலைஞர் அவர்களும் முதன் முதலாக சந்தித்துக் கொண்டனர். அந்த இனிய நட்பு அவர்களை உற்ற கொள்கை நண்பர்களாக மாற்றியது. 43 ஆண்டு காலம் திமுகவின் பொதுச் செயலாளராகவும், பல்வேறு துறைகளின் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர் என்பதெல்லாம் அவரது சிறப்புகளை உணர்த்தினாலும், திராவிட இயக்க கொள்கைகளை அணையாமல் பாதுகாத்த மாவீரர் என்பதே அவரது பெருமையை பறைசாற்றும். எந்த நிலையிலும் கொள்கையை விட்டுக் கொடுக்காத சுயமரியாதை போராளியாக அவர் வாழ்ந்து மறைந்திருக்கிறார். ஆதிக்க எதிர்ப்பு போராட்டங்களில் ஏவுகணையாய் செயல்பட்ட அவரது தீரமும், தமிழர் வாழ்வுரிமைகளில் அவர் காட்டிய அக்கறையும், பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளில் சமரசம் செய்யாத முனைப்பும் அவரை தமிழர்களின் இனமானப் பேராசிரியர் என போற்ற காரணங்களாய்
உள்நாட்டு பிரச்சனையை மோடி சர்வதேச பிரச்சனையாக்கி விட்டார்..! முதமிமுன்அன்சாரி MLA குற்றச்சாட்டு.!
தென்காசி.மார்ச்.6, புளியங்குடியில் அத்தக்வா பயிலகம் சார்பில், குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மாநாடு நடைப்பெற்றது, இதில் செ.ஹைதர் அலி, தி.வேல்முருகன், அய்யாவழி பாலமுருகன், காயல் மஹ்பூப், புளியங்குடி செய்யதலி, தென்காசி நெய்னா உள்ளிட்டோர் பேசினர். இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உரையாற்றியதாவது... நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க நடைபெறும் இப்போராட்டத்தில், நாம் சாதி, மதங்களை கடந்து போராடுகிறோம் என்பதே ஒரு சிறப்புத்தான். அதற்கு இந்த மேடையும் ஒரு உதாரணமாகும். அவர்கள் மக்களை மதரீதியாக பிரிக்க நினைத்தார்கள். ஆனால், நாம் நாட்டைக் காக்க ஒன்றாக போராடுகிறோம். நாட்டிலேயே முதன் முதலாக அஸ்ஸாமில் இந்த போராட்டங்களை தொடங்கி வைத்ததே இந்து சமுதாய சகோதர, சகோதரிகள் தான். அவர்கள் தான் பாதிப்பை முதலில் உணர்ந்தவர்கள். இன்று அஸ்ஸாமின் தடுப்பு முகாம்களில் நிலவும் அவலங்கள் கொடுமையானது. அங்கு பாலுக்கு அழும் குழந்தைகளின் பசி தீர்க்க. நீண்ட வரிசையில் தாய்மார்கள் காத்துக் கிடக்கிறார்கள். முகாமில் உள்ள மருத்துவரை பார்க்க பெரியவர்கள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கிறார்கள். ஒரே கூடாரத்தில் பலர் அடைக்கப்பட்டு நெரிசலில் தினமும் உயிரிழப்புகள் நேரிடுகிறது. "கழிவறை" பயன்படுத்த மக்கள் 'வரிசையில்' நிற்கும் கொடுமை நிலவுகிறது. அங்கு NRC அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்டுள்ள சீரழிவுகள்