கோவையில் விடுதலைப் போர் வரலாறு மீட்பு மாநாட்டில்… மஜக மாநில செயலாளர் எம்.எச்.ஜாபர் அலி பங்கேற்பு

36 முஸ்லிம்கள் உட்பட 43 புரட்சியாளர்கள் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டதை நினைவு கூறும் வகையில் மே 17 இயக்கம் சார்பில் கோவை உக்கடத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் மாநாடு நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் எம்.எச்.அப்பாஸ் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் மஜக மாநில செயலாளர் எம்.எச். ஜாபர் அலி, இளைஞரணி மாநில துணைச் செயலாளர் PMA.பைசல் ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் வருடம் தோறும் தொடர்ந்து இந்நிகழ்வை முன்னெடுப்பதால் அவருக்கு வாழ்த்து கூறி சால்வை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி சிறக்க பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஊக்குவிப்பு குறித்தும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் H.M.முஹம்மது ஹனீப், A.S.ஜாபர் சாதிக், KTU.காஜா, ஆயில் ஹக்கிம், அன்வர் பாஷா, மாவட்ட இளைஞரணி செயலாளர் MMR.முஜி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிரௌஸ் கான், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜே.பயாஸ், பொருளாளர் அப்துல் சலீம், துணைச் செயலாளர் ஜாவித் உள்ளிட்ட திரளான மனிதநேய சொந்தங்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.