ஆம்பூரில் களைகட்டிய மஜக பொதுக்கூட்டம்.! பொங்கி எழுந்த நல்லிணக்கம்…!!

image

image

image

image

image

வேலூர்.நவ.25. ,இன்று வேலூர் மேற்கு மாவட்டம் ஆம்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் பெரும் மக்கள் எழுச்சியோடு நடைபெற்றது.

இதில் மஜக பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், மஜக மாநில பொருளாளர்
எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களும், மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் அவர்களும்,சிறப்பான நல்லிணக்க உரையை வழங்கினர்.

தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA அவர்களும், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது கருணாஸ் MLA ஆகியோர் எழுச்சியுரையாற்றினார்கள்.

மஜக மாநில துணைச்செயலாளர் வசீம் அக்ரம் அவர்களின் வழி காட்டுதலில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் M.ஜஹிரூஸ் ஜமா அவர்கள் தலைமையில் மஜகவினர் மிகச்சிறப்பான பணிகளை செய்திருந்தனர்.

ஆம்பூரில் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் மஜக கொடிகள் கட்டப்பட்டுருந்தது.

சென்னை_பெங்களூர் நெடுஞ்சாலை முழுக்க கருப்பு வெள்ளை கருஞ்சிவப்புகளால் அலங்கரிக்கப்பட்டு
பரபரப்பாக இருந்தது.

நகர செயளாலர் M.பிர்தோஸ் அஹமத் (எ) பித்து அவரகளின் வரவேற்புரையுடன், மிகுந்த உற்சாகத்தோடு நல்லிணக்க கூட்டம் தொடங்கியது.

பல்வேறு சமுதாய மக்களும் முதன்முறையாக இரண்டாயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் உற்சாகமாக ஆம்பூரில் ஒன்று கூடியது பெரும் மனநிறைவை தந்தது.

மேடையின் முன்புறம் மட்டுமல்ல,
இடமும், வலதும் முன்னும், பின்னும் என ஆர்வமாக பொதுக்கூட்ட உரையை செவி மடுத்தனர்.

காரணம் இதே ஆம்பூரில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக தீய சக்திகளால் பெரும் கலவரம் நடைபெற்றது இது அனைவரும் அறிந்ததே.

அதன் பிறகு பிரிந்த மக்களை மீண்டும் இணைக்க எந்த கட்சியும் எந்த தலைவர்களும் முயற்சி செய்யவில்லை.!

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று மனங்களுக்கிடையே ஒரு இணக்கம் ஏற்பட வழி வகுக்கப்பட்டுள்ளது.

இந்த நல்லிணக்க நிகழ்வை ஆம்பூரை சார்ந்த தொழிலதிபர்களும், சமூக ஆர்வலர்களும் வரவேற்று மகிழ்ந்து
மஜகவுக்கு நன்றியையும், பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

ஆம்..
மஜக எடுத்த இந்த நல்லிணக்க பொதுக்கூட்டம்.

ஆம்பூரில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் உருவாக்கியுள்ளது.!

சிறப்புவாய்ந்த இந்த பொதுக்கூட்டத்தை வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் SMD.நவாஸ், Pm.ஷபியுல்லா , Ex.mc.sm.ஷாநவாஸ் , சையத் ஜாவித் ஆகியோர் சிறப்பாக
செய்திருந்தனர்.

T.R.முன்னா(எ) நஸிர் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.!

தகவல்.
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி.
#MJK_IT_WING
#வேலூர்_மேற்கு_மாவட்டம்.
25.11.17