வேலூரில்… இந்தியா கூட்டணி வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு… தீவிரமாக வாக்கு சேகரித்த மஜகவினர்..

ஏப்ரல் – 15.,

நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில், இந்திய கூட்டணிக்கு ஆதரவாக வேலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் திரு D.M கதிர் ஆனந்த் அவர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளர் ஏஜாஸ் தலைமையில் மஜக-வினர் வாக்குகளை சேகரித்தனர்.

மஜக-வினர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கொடிகளுடன் களமிறங்கி வீதி, வீதியாக துண்டு பிரசுர பரப்புரைகளை முன்னெடுத்தனர்.

இதில் மஜக வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் நபிஸ், வேலூர் மாநகர செயலாளர் சையத் தாவூத், நகர துணை செயலாளர் சையத் நாசிர், ஹுசேன், கவுஸ் பாஷா மற்றும் திரளான மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#வேலூர்_மாவட்டம்
13.04.2024.