திருப்பூர் மஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..! மாநில செயலாளர் பங்கேற்ப்பு..!!

image

image

திருப்பூர்.ஏப்.20., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் J.பஷீர் அவர்களின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில செயலாளர் A.K.சுல்தான் அமீர் அவர்கள், மாநில பேச்சாளர் ஹைதர் அலி, மாநில செயற்குழு உறுப்பினர் P.M.இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக A.T.R.பதுர்தீன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது.
தொழிலில் ஏற்பட்ட நலிவின் காரணமாக கட்சி மாவட்ட துணை செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக கூறிய கண்ணன் அவர்களிடம்.
தொழில் பாதிப்பு ஏற்படாமல் கட்சி பணியாற்றி சமூகத்திற்கு பணியாற்ற மாநில செயலாளர் சுல்தான் அவர்கள் அறிவுறித்தினார்கள்.

இதையடுத்து ராஜினாமா முடிவை திரும்ப பெற்று பொறுப்பில் இருந்து பணியாற்றுவதாக கண்ணன் அவர்கள் உறுதியளித்தார்.

நிர்வாகிகள் கூட்டத்தில்  கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1.தற்போது இருக்கும் நிர்வாகம் கட்சி பணியில் மிகுந்த வீரியத்தோடும் சிறப்பாகவும் செயல்பட வேண்டும் என
முடிவு செய்யப்பட்டது.

2.இனி தொடர்ந்து மாதம் 20.முதல் 28ம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

3.வரும் ஞாயிற்றுக்கிழமை 23.4.2017 அன்று மாலை மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான எம்.தமீமுன் அன்சாரி MLA அவர்களை அழைத்து திருப்பூர் மாவட்ட அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியையும், மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கம் முன்னிட்டு
மஜக கொடியேற்றும் நிகழ்ச்சியும்
நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில்  மாவட்ட செயலாளர் பஷீர், மாவட்ட துணைச் செயலாளர்கள் கண்ணன், முஸ்தாக், ரஹமத்துல்லா, மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் அபுபக்கர் சித்தீக், வர்த்தகர் அணி செயலாளர் ரபீக், மீனவர் அணி செயலாளர் சர்புதீன், இளைஞர் அணி துணைச்செயலாளர் உமர் கத்தாப், மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் சகாப்தீன்,
தொழிற்சங்க செயலாளர் ரஹ்மான், சிறப்பு அழைப்பாளர் அக்பர் அவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
திருப்பூர் மாவட்டம்.
19.04.2017