திண்டுக்கல் மாவட்டம் பிலாத்து கிராம மக்கள் மஜக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

image

image

image

திண்டுக்கல்.ஏப்.21., வேடசந்தூர் தாலுகா பிலாத்து கிராம மக்களின் அமைதியை சீர்குலைத்து பெண்களை கேலிக்கூத்து செய்து வந்த ஆண்டிகுளம் என்ற ஊரை சேர்ந்த முருகேசன் என்பவர் நாகலெட்சுமி என்ற பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதை வடமதுரை  காவல் நிலையத்தில் ஊர் பொது மக்கள் சார்பாக SP இடம் புகார் அளித்தனர்.

புகார்கள் திண்டுக்கல் SP.திரு சரவணன் பார்வைக்கு சென்றும். கண்டு கொள்ளாமல், நீதிக்கு புறம்பான செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் காவலர்களையும், அதற்கு உறுதுணையாக தொடர்ச்சியாக ஒருதலை பட்சமாக செயல்பட்டு வந்த திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளர்.

திரு சரவணன் அவர்களை கண்டித்து SP.அலுவலகம் சில தினங்களுக்கு முன்பு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் முற்றுகை போராட்டம்  நடந்தப்பட்டது.

அதற்க்கு நன்றி தெரிவித்து நேற்று 20/04/2016 இரவு 07.30 மணியலவில் பிலாத்து கிராம பொது மக்களின் சார்பாக அநீதி இழைக்கப்பட்ட  பொதுமக்களுக்கு நியாயமான முறையில் போராடி நீதியை பெற்று தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் அனைவருக்கும் ஊர் பொது மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

இதில் மஜக மாநில துணை செயலாளர் திண்டுக்கல் M. அன்சாரி, மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா, மாவட்ட பொருளாளர் U.மரைக்காயர் சேட், மாவட்ட துணை செயலாளர் ஹபிபுல்லா (இரயில்வே) மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல் :-
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
திண்டுக்கல் மாவட்டம்.
21/04/2017.