கத்தாரில் மாரடைப்பால் இறந்த சகோதரர் இளங்கோவன்..! குடுப்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மஜக மாநில பொருளாளர்..!

இராமநாதபுரம்.மே.14., கத்தாரில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த வாலிபர் இளங்கோவன் (த/பெ. பெருமாள், வயது-24) கடந்த மே.05 அன்று சனிக்கிழமை மதியம் அல்கிஸ்ஸா என்னும் பகுதியில் நண்பர்களுடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு தான் வேலைசெய்யும் வீட்டிற்க்கு புறப்படும் போது நண்பர்களிடம் நெஞ்சுவலிக்கிது என்று கூறியுள்ளார் நன்பர்கள் விரைந்து அவரின் தங்குமிடத்திற்க்கு அழைத்துச்சென்று மருத்துவணைக்கு செல்லலாம் என்று சென்று அவர் இருப்பிடம் நோக்கி புறப்பட்டுள்ளனர் அருகில் நெருங்கி இருப்பிடம் உள்நுழைந்த போது திடீரென மயங்கி விழுந்து கண்கள் இரண்டும் மரண தருவாயிலிருந்துள்ளது, உடனே மருந்துவமணைக்கு சென்றுள்ளனர் அங்கே மருத்துவர்கள் மரணம் அடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கத்தார் நிர்வாகிகள் இளங்கோவனுடைய உறவினர்களுக்கு விசயத்தை தெரியப்படுத்தி, உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் இன்று அல்லது நாளை செவ்வாய்க்கிழமை அன்று சொந்த ஊருக்கு வரப்படும் என்ற தகவல் வந்துள்ளது.

தகவலை அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்கள் நேற்று (13.05.2018) தோழர். இளங்கோவன் அவரது வீட்டிற்கு சென்று குடும்ப உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதில் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது இலியாஸ் , நகர செயலாளர் ஷாகுல் ஹமீது, நகர துணைச் செயலாளர் ஜாபர் அலி , தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கலிபா, மற்றும் ஷேக் பரீத், அல் ஜமில், ஷேக் முஹம்மது, எமனை சாகுல், நிர்வாகிகளான ரகுமான், PRO இப்ராஹிம் மற்றும் நகர , கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_இராமநாதபுரம்_மேற்கு_மாவட்டம்
14/05/2018