அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்…

மோடிக்கெதிராக கருப்புக்கொடி காட்டிய போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட மஜக பொருளாளர் ஹாருன் ரசீது, மஜக நிர்வாகிகள் புதுப்பேட்டை யூசுப், பல்லாவரம் அப்துல்லா, பல்லாவரம் அப்துல் சமது, தாம்பரம் சலீம், அஜ்மல் கான், ஷேக் கஜினி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த 19 பேருக்கும் செங்கல்பட்டு செஷன்ஸ் கோர்ட்டில் பெயில் கிடைத்திருக்கிறது.

எல்லா புகழும் இறைவனுக்கே.

அனைவரும் அநேகமாக இன்று மாலை விடுதலை செய்யபடுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

எமக்காக குரல் கொடுத்த அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், காவிரி போராட்ட தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
பொருளாளர் ஹாரூன் ரசீது உள்ளிட்ட மஜகவினர் ஏழு பேரையும் வரவேற்க, தலைமை நிர்வாக குழு உறுப்பினர் ஏ.எஸ் அலாவுதீன் தலைமையில் வரவேற்பு குழு அமைப்பட்டுள்ளது.
(தொடர்புக்கு : 04443514550)

தொடர்புக்கு:
எமது காவிரி உரிமை போராட்டம் சமரசமின்றி தொடரும்…

இவண்;
மு.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி,
24/04/2018.