பிப்.27, தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது. இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பேசியதாவது... CAA சட்டத்தில் ஈழத் தமிழர்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள்? என கேட்கிறோம். அதில் மத பாகுபாடுகளை ஏன் காட்டுகிறீர்கள்? என்கிறோம். இது தவறா? அஸ்ஸாமில் NRC சட்டத்தை அமல்படுத்தியதால் 19 லட்சம் மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது. இதில் 12 லட்சம் பேர் இந்து சமுதாய மக்கள். இதை யாரும் பேசுவதே இல்லை. நாம் முன்னெடுப்பது அனைவருக்குமான போராட்டம். சமூக நீதியை காப்பதற்கான, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டம். அமைதியாக ஓரிடத்தில் கூடி மக்கள் ஆர்ப்பரிப்பது, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது ஆகியன உச்ச நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டவை. இதை சீர்குலைக்கவும், வன்முறை மூலம் மிரட்டவும் சிலர் முயற்சிக்கிறார்கள். அவர்கள் தான் டெல்லியில் வன்முறையை உருவாக்கியிருக்கிறார்கள். அங்கு இதற்கு முன்பு 3 முறை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள். அப்போதே டெல்லி காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்திருக்க வேண்டும். அவர்கள் அதை செய்யவில்லை. சங்பரிவார் ஆதரவு கும்பல் செய்த கலவரங்களுக்கு காவல்துறையின் ஒரு பிரிவும் சேர்ந்து துணைப் போயிருக்கிறது. அவர்கள்
Tag: M.தமிமுன் அன்சாரி
ஜாமியாமில்லியா மற்றும் சப்காகர் மாணவர் அமைப்பின் நிர்வாகிகளுடன் மஜக பொதுச்செயலாளர் முதமிமுன்அன்சாரி MLA சந்திப்பு!
டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஜாமியா மில்லியா மாணவர்கள் உரையாடினார்கள். தொடர்ந்து, ஜாமியா மில்லியா பல்கலைகழக மாணவர்கள் ஏற்பாட்டில், 'சப்கா கர்' நிர்வாகிகளுடன் நல்லெண்ண சந்திப்பு நடைப்பெற்றது. 'சப்கா கர்' எல்லை காந்தி என அழைக்கப்பட்ட கான் அப்துல் கஃபார் கான்னுடைய அமைப்பு. இதனை மாணவர்கள் புணர்நிர்மானம் செய்து பல்வேறு சமூகப் பிரச்சனைகள் மற்றும் சமூக நல பணிகளில் ஈடுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #டெல்லி_முகாம். 21/02/2020
டெல்லியில் கலவரத்தை கட்டுப்படுத்த உடனே இராணுவத்தை அனுப்புக! முதமிமுன்அன்சாரி MLA ஆவேசம்!!
பிப்.25, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் எழுச்சியாக நடைப்பெற்று வருகிறது. தஞ்சாவூர் 'ஷாகின் பாக்' போராட்ட களத்தில் பங்கேற்று உரையாற்றி விட்டு, கூத்தாநல்லூரில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடையே மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது.. https://m.facebook.com/story.php?story_fbid=2297101697056259&id=700424783390633 குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிரான வெகுமக்கள் போராட்டம் அனலாக தகித்துக் கொண்டிருக்கிறது. 73 நாட்களை கடந்தும் நாடெங்கிலும் போராட்டம் ஜனநாயக வழியில் வலுத்து வருகிறது. மக்கள் மதங்களை கடந்து ஒருங்கிணைகிறார்கள்.இதை சிலர் ஜீரணிக்க முடியாமல் திணறுகிறார்கள். குறுக்கு வழியில் போராட்டங்களை ஒடுக்க திட்டமிடுகிறார்கள். அரசுக்கு கோரிக்கை வைத்து அமைதி வழியில் போராடுவதில் தவறில்லை என உச்ச நீதிமன்றமே சொல்லி இருக்கிறது. இதை ஏற்காமல் சங்பரிவார பயங்கரவாதிகள் , வன்முறைகளுக்கு திட்டமிடுகிறார்கள். டெல்லியில் நேற்று முதல், சங்பரிவார கும்பல் மோசமான வன்முறையை தொடங்கியிருக்கிறது. இது அவர்களின் வழக்கம். தாய்ப்பாலோடு விஷத்தையும் சேர்ந்து அருந்தியவர்களுக்கு, சகிப்புத்தன்மை இருக்காது. டெல்லியில் ஜாப்ராபாத், சாந்த் பாக் போன்ற இடங்களில் அமைதியாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை , வலிய வந்து இப் பயங்கரவாத கும்பல் தாக்கியிருக்கிறது. இதற்கு பாஜக பிரமுகர்
டெல்லி ஷாஹின்பாக்கின் ஒழுங்குகளை பின்பற்றிப் போராடவேண்டும் : போராட்டக்களத்தில் முதமிமுன் அன்சாரி MLA பேச்சு!!
பிப்.24, கோவையில் 6 வது நாளாக குடியுரிமை கருப்புச் சட்டங்களுக்கு எதிராக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது . இதில் பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கூடியிருந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். சீமான், திருமுருகன் காந்தி, டாக்டர் KVS.ஹபீப் முஹம்மது உள்ளிட்டோர் அடுத்தடுத்து வருகை உரையாற்றினர். மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் அங்கு வருகை தந்து உரையாற்றியதாவது.. https://m.facebook.com/story.php?story_fbid=2294788540620908&id=700424783390633 நாங்கள் பிப்ரவரி 21 அன்று டெல்லியில் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள், மாணவிகள் நடத்திய அமைதிப் பேரணியில் பங்கேற்றோம். அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி கட்டுக்கோப்புடன் அணி வகுத்தார்கள். வாகன ஓட்டிகள் அவர்களுக்கு வழிவிடும் வகையில் செல்கிறார்கள், பொதுமக்கள் சாலையோரங்களில் நின்று ஆதரவு அளிக்கிறார்கள். அந்த வீதிகள் எங்கும் போராட்ட முழக்க எழுத்துகளை வரைந்திருந்தார்கள். அதுபோல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடக்கும் ஷாஹின் பாக்குக்கும் சென்றோம் . அன்று 69 ஆவது நாளாக ஆண்களும், பெண்களும் கூடி நின்றார்கள். சராசரியாக எப்போதும் 10 ஆயிரம் பேர் அங்கேயே இருக்கிறார்கள். உணர்வும், எழுச்சியுமாக மக்கள் போராடுகிறார்கள். அங்கே இந்து, முஸ்லிம், சீக்கிய, கிறிஸ்தவ அடையாளங்கள் பேனரில் பெரிதாக வைக்கப்பட்டுள்ளது. காந்தி, அம்பேத்கர், நேதாஜி, அபுல்கலாம் ஆசாத், பகத்சிங் போன்ற தியாகிகளின் படங்கள் வைக்கப்பட்டு பொதுத்தன்மை முன்னிறுத்தப்படுகிறது. அங்கு
நாடு முழுக்க ஷாகின்பாக்குகள் பரவுகின்றன.! டெல்லி ஷாகின்பாத் போராட்ட களத்தில் முதமிமுன் அன்சாரி MLA பேச்சு..!
டெல்லி.பிப்ரவரி.22., டெல்லியில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நடைபெறும் ஷாகின் பாக் தொடர் காத்திருப்பு போராட்டத்தின் 69-வது நாளில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், அவருடன் பொருளாளர் ஹாரூண் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா அவர்களும் பங்கேற்று முழக்கம் எழுப்பினர். எப்போதும் இந்த போராட்ட களத்தில் சராசரியாக 10 ஆயிரம் பேர் இருந்துக் கொண்டே உள்ளார்கள். அவர்களே சமைக்கிறார்கள். அவர்களே துப்புரவு பணிகளையும் செய்கிறார்கள். அவர்களே போராட்டத்தை ஒழுங்குப்படுத்தி வழி நடத்துகிறார்கள். அங்கே காந்தி, நேதாஜி, அபுல் கலாம் ஆசாத், அம்பேத்கார், பகத்சிங் உள்ளிட்டோரின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்து, முஸ்லிம், கிரித்தவ, சீக்கிய மத அடையாளங்கள் முன்னிறுத்தப்பட்டு நல்லிணக்கம் வலியுறுத்தப்படுகிறது. மேடையில் யாராவது முரண்பட்டு பேசினால் அவர்கள் தடுக்கப்பட்டு தவிர்க்கப்படுகிறார்கள். பல சமூக மக்களும் பங்கேற்பதால் அது ஒரு தேசிய ஒருமைப்பாட்டு களமாகவும் மாறியுள்ளது. பெண்களே தலைமையேற்று வழி நடத்துகிறார்கள் என்பது ஒரு சிறப்பு. ஒரு வழக்கறிஞர் குழு அனைத்தையும் பொறுப்புணர்வோடு கண்காணித்து வருகிறது. அதில் உள்ள ஜமால் முஜாஹித் என்பவர் பொதுச் செயலாளரிடம் பேசும் போது, இப்போராட்டத்தை மக்களே தொடங்கியுள்ளார்கள். மக்களே இதை முடித்து வைப்பார்கள் என்றார். பிறகு அம்மக்களுக்கு மத்தியில் பொதுச்