வேலூர் சட்டமன்ற தொகுதியில் அஇஅதிமுக முக்கிய நிர்வாகிகளிடம் வாக்கு சேகரிக்கும் வேலூர் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் ஹாருன் ரசீது அவர்கள்
Author: admin
அறந்தாங்கி தொகுதி அ.இ.அ.தி.மு.க வேட்பாளருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு…
ஏப்.25., அறந்தாங்கி தொகுதி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் திரு.ரத்தின சபாபதி அவர்களை கூட்டணி கட்சியான மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இதில் அ.இ.அ.தி.மு.க ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் மஜக மாவட்ட துணைச் செயலாளர் கோட்டைப்பட்டினம் A.முகம்மது ஹாரிஸ், ஆவுடையார்கோவில் ஒன்றிய செயலாளர் ஹபீப் ரஹ்மான், ஒன்றிய பொருளாளர் M.செய்யது அபுதாகிர், கோபாலப்பட்டினம் கிளை செயலாளர் செய்யது அபுதாகிர், துணைச் செயலாளர்கள் S.செய்யாது அபுதாகிர், மீமிசல் கிளை செயளாலர் J.உபையத்துல்லாஹ்,பொருளாளர் R.அகமது மாஜிது, முத்துக்குடா கிளை செயலாளர் S.சம்சுதீன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் : மஜக ஊடகப்பிரிவு புதுகை மாவட்டம் - 9443340341
தொகுதி மாற்றம்! முதல்வருக்கு மஜக நன்றி!
மனிதநேய ஜனநாயக கட்சிக்கு அதிமுக கூட்டணியில் நாகப்பட்டினம் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் ஒட்டன்சத்திரம் தொகுதியை மாற்றி அதற்கு பதிலாக வேறு ஒரு தொகுதியை வழங்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் முதல்வர் அம்மா அவர்களுக்கு மஜக சார்பில் கடிதம் கொடுத்து இருந்தோம். எங்களின் வேண்டுகோளை அன்புடன் பரிசீலித்த முதல்வர் அவர்கள், இன்று எங்களின் விருப்பப்படி ஒட்டன்சத்திரத்திற்கு பதிலாக வேலூர் தொகுதியை மனிதநேய ஜனநாய கட்சிக்கு வழங்கி இருக்கிறார்கள். புதிதாக உருவான மனிதநேய ஜனநாய கட்சியின் மீது தொடர்ந்து அன்பு காட்டிய,எமது ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளித்து வரும் அதிமுக பொதுச்செயலாளர் டாக்டர் அம்மா அவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். ஏற்கனவே செயற்குழுவில் எடுத்த முடிவின் படி,ஒட்டன்சத்திரத்திம் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கட்சியின் பொருளாளர் ஹாரூண் ரசித் அவர்கள் வேலூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவார். இவண் M.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி
வேதாரணியம் தொகுதி அதிமுக இணைச்செயலாளர் மீரா.ஷேக் மெய்தீன் அவர்கள் நாகை சட்டமன்ற தொகுதி மஜக வேட்பாளரை சந்தித்து வாழ்த்து…
ஏப்.20., இன்று மாலை வேதாரணியம் தொகுதி அதிமுக இணைச்செயலாளர் மீரா.ஷேக் மெய்தீன் அவர்கள் நாகை சட்டமன்ற தொகுதி மஜக வெற்றி வேட்பாளர் M.தமிமுன் அன்சாரியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் . இந்நிகழ்வின் போது அமைச்சர் ஜெயபால் மற்றும் மஜக மாநில,மாவட்ட,ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் : மஜக ஊடகப்பிரிவு
நாகை சுற்றுவட்டார கிராமங்களில் கடும் வெய்யிலிலும் இரட்டை இலைக்கு ஒட்டு வேட்டை…
ஏப்.20., இன்று நாகை சுற்றுவட்டார கிராமங்களில் கடும் வெய்யிலிலும் அதிமுக நிர்வாகிகள் தலைமையில் இரட்டை இலைக்கு ஒட்டு வேட்டை நடத்தினார் நாகை சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி. இதில் பொதுமக்களும் இளைஞர்களும் திரளாக வரவேற்று மகிழ்ந்தனர். உடன் மஜக மாநில,மாவட்ட,ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் அ.இ.அ.தி.மு.க (கூட்டணி கட்சி) நிர்வாகிகள் இருந்தனர். நமது சின்னம் இரட்டை இலை!!! மீனவர்களின் சின்னம் இரட்டை இலை!!! ஏழைகளின் சின்னம் இரட்டை இலை!!! வாக்களிப்பீர்!! இரட்டை இலைக்கு!!! தகவல் : மஜக ஊடகப்பிரிவு #votefor_ansari_nagai