ராகுல் காந்திக்கு மனிதநேய ஜனநாயக கட்சி வாழ்த்து!

image

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் வாழ்த்து செய்தி)

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உட்கட்சி ஜனநாயகத்தை பேணிகாக்கும் வகையில் இன்று அவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது நாடு முழுக்க கொண்டாடப்படுகிறது.

நேரு காலம் தொடங்கி நாடு போற்றும் தலைவர்களால் வழிநடத்தப்பட்ட காங்கிரஸ் பேரியக்கத்திற்கு அவர் தலைமையேற்றிருப்பது இந்திய வரலாற்றில் ஒரு அம்சமாகும்.

மதவாத சக்திகளை வீழ்த்தி, சமூக நீதியை காத்திடவும், நாடு இன்று சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளிலிருந்து நாட்டை மீட்கவும், வலிமை வாய்ந்த தலைவராக அவர் உருவெடுத்திருக்கிறார்.

அவர் காங்கிரஸ் பேரியக்கத்தை வழிநடத்துவதோடு மட்டுமின்றி, நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அவர் பணிகள் சிறக்க வாழ்த்துகிறோம்.

அவரை ஏகமனதாக தேர்ந்தெடுத்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுக்கும் எமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
#M_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.
12.12.17