புளியங்குடியில் மஜக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்!

image

image

image

image

நெல்லை.நவ.12., நெல்லை மேற்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் எதிர்வரும் டிசம்பர்-6 அன்று பாபர் மஸ்ஜித் வழக்கில் நீதிவேண்டி தென்காசியில் நடைபெறும் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்திற்கான மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று 12-11-2017 மாலை புளியங்குடியில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் I.மீரான் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர்  புளியங்குடி S.செய்யது அலி அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்.

இதில் #டிசம்பர்_6 ரயில் நிலையம் முற்றுகை போராட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்று விவாதிக்கப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

இதில் நெல்லை மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட, நகர நிர்வாகிகள் பங்கேற்றார்கள்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நெல்லை_மேற்கு_மாவட்டம்
12-11-2017