திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம்..!

image

திருவள்ளூர்.செப்.20., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஆலோயோசனைக் கூட்டம் நேற்று மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் S.M.நாசர் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ் கலந்துகொண்டார்கள்.

மேலும் இதில் எதிர்வரும் 22.09.17 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மியான்மரில்  ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துவரும் இன அழிப்பை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிகப்படியான மக்களை திரட்டி கலந்துகொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஜாபர், மாவட்ட துணை செயலாளர் கரிமுல்லாஹ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் நிஜாம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவள்ளூர்_கிழக்கு_மாவட்டம்
19.09.17