தமிழக காவல்துறை தலைவர்களுடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு..!

image

சென்னை.ஆக.19., தமிழக காவல்துறை தலைவர் (DGP) திரு.ராஜேந்திரன் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச் செயலாளர்  M.தமிமுன் அன்சாரி MLA சந்தித்தார், அவர்களுடன் மாநில துணை செயலாளர்கள் N.A.தைமியா, A.சாதிக் பாஷா ஆகியோர் சென்றனர்.

விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் சங்பரிவார் அமைப்புகள் சில இடங்களில் திட்டமிட்டு வன்முறைகளை நிகழ்த்த கூடிய அபாயமுள்ள இடங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், சிறுபான்மை மக்கள் வாழுமிடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபடும் தீயசக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மஜக சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்ரீத் பண்டிகையொட்டி ஆடு, மாடுகளை குர்பானி கொடுக்க சில தீய சக்திகள் இடையூறு கொடுக்காத வண்ணம் உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டும் என்றும், வாகனங்களில் கால்நடைகளை கொண்டு செல்லும் போது தடுக்க முயலும் தீய சக்திகளை
சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்பட்டது.

பிறகு SBCID, உளவுத்துறை கண்காணிப்பாளர் திரு.அரவிந்த் சந்தித்து இது குறித்து விரிவாக பேசினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
தலைமையகம்,
சென்னை.
19.08.17