மஜக சார்பில் காயல்பட்டினத்தில் 71வது சுதந்திரதின விழா கொடியேற்றம் நிகழ்ச்சி..!

image

image

தூத்துக்குடி.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம்  காயல்பட்டினம் நகரத்தின் சார்பாக 71வது சுதந்திர தின நிகழ்ச்சி இன்று காலை 8.30 மணியளவில் காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் காயல்பட்டினம் நகர நிர்வாகிகள் தலைமையிலும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையிலும் தலைமை செயற்குழு உறுப்பினர் ஹாஃபில் அகம்மது மீரா தம்பி அவர்கள் கொடியை ஏற்றி வைத்தார்கள்.

அதன் பிறகு நாட்டு பற்றுள்ள உணர்ச்சி ஊட்டும் முழக்கங்களை நகர துணை செயலாளர் ஜியாவுதீன் அவர்கள் எழுப்பினார்.
கூடியிருந்த பொதுமக்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து முழக்கங்களை எழுப்பினார்கள்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் A.ஜாகிர் உசேன் அவர்கள் சுதந்திரதின உரை நிகழ்த்தினார். பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் முகம்மது நஜிப்,
மாவட்ட MJTS செயலாளர்
ராசிக் முஸம்மில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்
முகம்மது சபீர, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் சதாம், நகர செயலாளர் ஜிப்ரி, நகர பொருளாளர் மீரான், நகர துணை செயலாளர்கள் மொகுதும், சாகுல் ஹமீத், பக்கிர் மற்றும் உறுப்பினர்கள் பொது மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டார்கள்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
தூத்துக்குடி
தெற்கு மாவட்டம்.
15.08.2017.