கல்பாக்கத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மஜக மாவட்ட பொதுக்குழு…

image

image

image

காஞ்சி.ஆக.10., மனிதநேய ஜனநாயக கட்சியின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட  பொதுக்குழு கல்பாக்கத்தில் மாவட்டச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

இப்பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளராக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மாநிலச் செயலாளர் N.A.தைமிய்யா ஆகியோர் பங்கேற்று பொதுக்குழு உறுப்பினர்களிடம் கலந்துரையாடினார்கள்.

மாவட்டப் பொருளாளர் மீராஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் யூஸுப், மாவட்டத் துணைச் செயலாளர் சர்தார் ஆகியோர் கலந்துக் கொண்டனர். மாவட்டம், ஒன்றியம், கிளை நிர்வாகிகளும் பங்கேற்று கட்சியின் எதிர்கால செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்தனர்.

இந்நிகழ்வில், காட்டாங்குளத்தூர் ஒன்றியச் செயலாளர் சுரேஷ் தலைமையில் ஏராளமானோர் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.

முன்னதாக, கல்பாக்கத்தில் இரண்டு இடங்களில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொதுக்குழு நிறைவடைந்தவுடன் பத்திரிக்கையாளர்களுக்கு பொதுச் செயலாளர் பேட்டியளித்தார்.

பொதுக்குழு நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்பாக்கத்தைச் சார்ந்த மாவட்டத் துணைச் செயலாளர் சமியுல்லாஹ், IKP மாவட்டச் செயலாளர் அப்துல் ரஷீது, நகரச் செயலாளர் காலிப் உட்பட நிர்வாகத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
காஞ்சி தெற்கு மாவட்டம்
09.08.17