நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் : மாணவர் இந்தியா பங்கேற்பு..!

image

image

சென்னை.ஜூலை.26., நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட இரண்டு சட்ட மசோதக்களுக்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்றுத்தர மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சென்னையிலுள்ள பெரியார் திடலில் இன்று  மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைப்பெற்றது.

இதில் மாணவர் இந்தியா சார்பாக மாநிலச் செயலாளர் முஹம்மது அஸாருதீன், மாநில துணைச் செயலாளர் பஷீர் அஹமது மற்றும் லால்பேட்டை முஸரப் ஆகியோர் பங்கேற்றனர்.

பல்வேறு மாணவர் அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகள் மற்றும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர்  இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

தகவல்;
ஊடக பிரிவு
மாணவர் இந்தியா
சென்னை
26.07.2017