திருவாரூரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மறியல்! விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மஜக பங்கேற்பு!!


டிச.08,

விவசாயிகள் வேளாண் கருப்பு சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் இன்று அழைப்பு விடுத்திருந்த பொதுவேலை நிறுத்த போராட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவளித்திருந்தது.

அதன்படி இன்று திருவாரூரில் ஆதரவளித்த அனைத்து கட்சி மற்றும் சங்கங்களின் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது.

இதில், மஜக திருவாரூர் மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா தலைமையில் புலிவலம் கிளை நிர்வாகிகள் சேத்தப்பா (எ) முகம்மது மைதீன், ரியாஜ் அஹமது, கமாலுதீன், ஜாஸ்மின், அன்சாரி உள்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.