நாகை தொகுதிக்கு உட்பட்ட திருமருகலை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் .!

மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் முதலமைச்சரிடம் நேரில் கோரிக்கை.!

இன்று மஜக பொதுச் செயலாளரும் , நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்களை , மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்கள் இஃப்தார் விருந்து தொடர்பாக அழைத்து பேசினார் . அப்போது மாடு விற்பனை குறித்தும் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் நடைமுறை சிக்கல்கள் குறித்தும் அது தொடர்பாகவும், அது தொடர்பாக  விவசாயிகளின் சிரமங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

பிறகு நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமருகலை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இவற்றை குறித்து கொண்ட முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கை  எடுப்பதாக அறிவித்தார் . 

தகவல:

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
21.06.2017