கவிக்கோ இல்லத்தில் மஜக பொதுச் செயலாளர்..!

image

image

சென்னை.ஜுன்.03., சென்னை
பனையூரில் உள்ள கவிக்கோ அவர்களின் இல்லத்திற்க்கு
மனிதநேய ஜனநாயக கட்சியின்
பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினரும்மான
M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்து அவரது உடலை பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்கள்.

மறைந்த கவிக்கோ மகள் வழி பேரன் டாக்டர் நசிர் அவர்களிடம் அவரது கடைசி நிமிடங்கள் பற்றி கேட்டறிந்தார்கள். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு பிறகு அங்கிருந்த இரங்கல் பதிவேட்டில் தனது கருத்துகளை பதிவு செய்தார்.

அதில், சிந்தனை என்னும் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்த பேரறிஞர் என்றும் காந்த வரிகளாலும், கந்தக சொற்களாலும் தமிழ் இலக்கிய உலகை வழிநடத்தியவர் என்றும், உலகின் சன்னலை தமிழ் இலக்கிய உலகிற்கு திறந்து காட்டியவர் என்றும் புகழாரம் சூட்டி இரங்கலை பதிவு செய்தார்.

அவருடன் மாநில விவசாய அணி செயலாளர் முபாரக், நாகை தெற்கு மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, சகோ.ஜெய்னுதீன் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

தகவல்:

தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
#MJK_IT_WING
சென்னை.
02.06.2017.