செங்கம் ஜப்பார் அவர்கள் நல்லடக்க நிகழ்வில் மஜக மாநில செயலாளர்…!

image

image

சென்னை.ஜூன்.02., கண்ணியமிகு காயிதே மில்லத் ஷாகிப் அவர்களின் அன்பை பெற்றவரும்,  இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்கின் முன்னாள் நிர்வாகியும், முன்னாள் பால்வளத் துறை தலைவர், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி, அம்மையார் ஜெயலலிதா ஆகியவர்களின் அன்பை பெற்றவருமான செங்கம் ஜப்பார் அவர்கள் இரு தினங்கள் முன்பு இயற்கை எய்தினார்கள்.

அவரது இறுதி பிரார்த்தனையும், நல்லடக்க நிகழ்விலும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இன்று நடந்தது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் அ.சாதிக் பாட்சா அவர்கள் மஜக சார்பில் கலந்துகொண்டார்கள்.

தகவல் ;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
02.06.2017