காயிதே மில்லத் ஊடக படிப்பு தொடக்க விழாவில் மாணவர் இந்தியா..!

image

image

சென்னை.ஏப்.24., காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பாக QIAMS ஊடகப் படிப்பு தொடக்க விழா
சென்னை ஹயாத் ரெஜென்ஸி ஹோட்டலில் நடைப்பெற்றது.

ஊடகத்துறையில் ஒர் உண்மை நிலையை கொண்டு வர அறக்கட்டளையின் செயலாளர்  தாவூத் மியாகன் அவர்களின் முயற்சி பாராட்டத்திற்குரியது.

சிறுபான்மை மற்றும் தலித் சமுதாய மக்கள் நிச்சயம் ஊடகத்துறையில் பணியாற்ற வேண்டும் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, பத்திரிக்கை ஆசிரியர்கள் நக்கீரன் கோபால், ஞானி உள்ளிட்டோர் வலியுறுத்தி உரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன், மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர் ஆகியோர் பங்கேற்றார்கள்.

தகவல் ;
மாணவர் இந்தியா
ஊடக பிரிவு,
சென்னை.
24.04.2017