கடையடைப்பு போராட்டத்திற்கு மஜக ஆதரவு!!

டெல்லியில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் நிர்வாண போரட்டம், எலிக்கறி உண்ணும் போராட்டம், நேற்றைய தினம் சிறுநீர் குடித்து போராட்டம், என பல்வேறு கவன ஈர்ப்பு போரட்டங்களை நடத்தி வருகிறார்கள்..

செவிடன் காதில் ஊதிய சங்காக
மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு விவசாயிகளின் போராட்டத்தை கண்டுகொள்ள மறுக்கிறது..

விவசாயிகளின் வாழ்வுரிமை போராட்டத்தை ஆணவ போக்கோடு கண்டுகொள்ள மறுக்கும் மத்திய அரசை கண்டித்து வருகின்ற 25.04.2017 அன்று தமிழகத்தில் அனைத்து கட்சிகளின் சார்பாக நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தை மனிதநேய ஜனநாயக கட்சி உணர்ப்பூர்வமாக ஆதரிக்கிறது.!

இவண்.
எஸ்.எஸ். ஹாரூன் ரசீது
மாநில பொருளாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
23.04.17