14வது நிதிக்குழு மானியபணிகள் நாகை MLA அதிகாரிகளுடன் கலந்தாய்வு…

image

image

image

நாகை. ஏப்.15., நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் தாலுக்காவில் குடிநீர் மற்றும் சாலைப்பணிகள் குறித்து BDO மற்றும் ஊராட்சி செயலாளர்கள் , அதிகாரிகளுடன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA ஆய்வு மேற்கொண்டார் .

14-வது நிதிக்குழு மானியத்தில் ஒதுக்கப்பட்ட 60 லட்சம் ரூபாய்க்கான 219 பணிகளில் 190 பணிகளை விரைந்து முடித்ததற்காக அதிகாரிகளை பாராட்டினார் .

அதுபோல ஒருங்கிணைந்து ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியில் ஒதுக்கப்பட்ட 22 லட்சத்தில் 16 பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது . மீதி 12 பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் .

இதுதவிர திருமருகல் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளுக்கு 2 கோடியே 19 லட்சத்தில் 117 பணிகள் புதிதாக தேவைப்படுவதாகவும் , அதை கலெக்டரிடம் பரிந்துரைக்க வேண்டும் என்றும் , வந்த கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும் , கலெக்டரிடம் பேசுவதாகவும் கூறினார் .

தற்போது திருமருகலில் குடிநீர் பிரச்சனைகள் தட்டுப்பாடு இல்லாத அளவுக்கு சீர் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது .

தகவல் :

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
15-04-2017