குடியாத்தம் தீப்பெட்டி தொழிற்சாலை தீ விபத்து மீட்பு பணியில் மஜக…

image

image

image

image

வேலூர்.ஏப்.11., வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட பலமனேரி ரோடு, லட்சுமணா புரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலையில்  நேற்று மாலை  திடீர் என தீ விபத்து ஏற்ப்பட்டது.

தகவல் அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் குடியாத்தம் ஒன்றிய நிர்வாகிகள் உடனடியாக தீ விபத்து ஏற்ப்பட்ட இடத்திற்கு சென்று தீயனைப்பு துறை.மற்றும் காவல்துறையினருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் பாதிக்கப்பட்ட 20 க்கும் மேற்ப்பட்ட  தொழிலாழர்களை அரசு மற்றும் தனியார் அவசர ஊர்திகளில் ஏற்றி கொண்டு அரசு தலைமை மருத்துவ மணையில் அனுமதிக்க பட்டனர்.

இதில் மஜக ஒன்றிய நிர்வாகிகள் காலு என்கிற Y.இம்தியாஸ், W.அமீன், Y.அம்ஜத், M.இம்தியாஸ், l.சாதிக்,  R.T.சலாம், இம்ரான், ஜாபர், மஸ்தான், காதர் பாஷா, சல்மான் ஆகியோர் தீ விபத்தின் போது  மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காயம்  அடைந்தவர்களை மருத்துவ மனைக்கு பார்க்க வந்த பொதுமக்களும், அரசு அதிகாரிகளும், துரிதமாக செயல்பட்டு கடப்பாறைகளுடன் மேற்க்கூரையில் ஏறி மீட்பு பணியில் ஈடுபட்ட மஜகவினர்க்கு தங்களது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்..

தகவல் ;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
வேலூர் மேற்கு மாவட்டம்.
10.04.2017.