தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் கிளையில் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க நிகழ்வு…

image

image

தூத்துக்குடி.மார்.01.,  மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாவது ஆண்டு துவக்க நாளான 28-02-2017 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் கிளையில் முதன்முறையாக மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

ஆத்தூர் கிளை செயலாளர் அன்வர் பாஷா முன்னிலையில் மாவட்ட செயலாளர் ஜாகிர்உசேன் அவர்கள் 
கொடியெற்றிவைத்து மனிதநேய ஜனநாயக கட்சி உருவான விதம் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் செயல்பாடு குறித்து நிர்வாகிகள் மற்றும் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம்  விளக்கினார்…

இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் கிளை நிர்வாகிகள், காயல்பட்டினம் நகர நிர்வாகிகள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
கொடியெற்றிவைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி
(MJK IT-WING)
தூத்துக்குடி மாவட்டம்.
28.02.2017