அரியலூர் மாவட்டத்தில் மஜக துணை பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் நேரில் ஆய்வு!

கோவை மத்திய சிறை முற்றுகை போராட்ட பணிகள் அரியலூர் மாவட்டத்தில் எழுச்சியாக நடைப்பெற்று வருகிறது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் அரியலூர் மாவட்ட நிர்வாகிகளை ஜெயம்கொண்டத்தில் துணை பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் சந்தித்து பணிகளை கேட்டறிந்தார்.

பிறகு கோவை சிறை முற்றுகை போராட்டத்தின் விளம்பர பணிகள் மற்றும் மக்களை திரட்டும் பணிகள் பற்றி கேட்டறிந்து ஆலோசணைகள் வழங்கி முழுவீச்சில் பணிகளை முடுக்கிவிட்டார்.

பிறகு ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து போராட்ட அழைப்புவிடுத்தார்.

இம்மாவட்டத்தில் பரவலாக சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளதால் மக்கள் ஆதரவு பெருகியுள்ளது.

அதிகமானோரை திரட்ட இம் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து களப்பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வில் மாவட்ட செயலாளர் அக்பர், மாவட்ட பொருளாளர் B.சர்புதீன் மாவட்ட துனை செயலாளர்கள் E.முகம்மது அலி, M.சேக் இஸ்மாயில்,
MJTS மாவட்ட செயலாளர் M.செய்யது பாரூக், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் K.யாஹிம் கான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#அரியலூர்_மாவட்டம்
03.01.2022