மஜக சத்தியமங்கலம் நகர ஆலோசனை கூட்டம்! துணை பொதுச்செயலாளர் செய்யது அகமது பாருக் பங்கேற்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று “சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி” கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது.

போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஈரோடு மேற்கு மாவட்டம் சத்தியமங்கலம் நகர ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ஏ.கே.ஷாநவாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் செய்யது அகமது பாருக், அவர்கள் கலந்து கொண்டு போராட்ட பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

இக்கூட்டத்தில் திரளான மக்களை போராட்டத்திற்கு அழைத்து செல்வது எனவும், வீடு தோறும் சென்று போராட்டம் குறித்து பரப்புரையில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட, நகர நிர்வாகிகள், கலந்து கொண்டனர்..

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#ஈரோடு_மேற்கு_மாவட்டம்
26.12.2021