You are here

ஜனவரி_08 கோவை முற்றுகை போராட்டம்! சேலம் மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று “சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி” கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போரை அறிவித்துள்ளது.

போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க சேலம் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் மகபூப் அலி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு சேலம் மாவட்டத்தின் சார்பாக திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பாபு, மாவட்ட துணைச் செயலாளர் சர்புதீன், விவசாய அணி மாவட்ட செயலாளர் அப்துல் காதர், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தஸ்தகீர், இளைஞரணி மாவட்ட செயலாளர் காஜா, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் விக்னேஷ், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#சேலம்_மாவட்டம்
12.12.2021

Top