காயல்பட்டினத்தில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் தொடர் பணியில் மஜகவினர்! துணைப்பொதுச்செயலாளர் தைமிய்யா பார்வையிட்டு மீட்புபணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்!

காயல்பட்டினத்தில் பெய்த கன மழையால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது அதை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பேரிடர் மீட்பு குழுவினர் மாநில துணைச் செயலாளர் சாகுல் ஹமீது, அவர்கள் தலைமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று அக்பர்ஷா தெரு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா, அவர்கள் பணிகளை பார்வையிட்டு மழை வெள்ள மீட்பு பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தூத்துக்குடி_மாவட்டம்
28-11-2021