காயல்பட்டினத்தில் மஜக சார்பில் கொடியேற்றம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா!! துணை பொதுச்செயலாளர் தைமியா பங்கேற்பு


தூத்துக்குடி: அக்.17.,

மனிதநேய ஜனநாயக கட்சி தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டினம் நகரம் சார்பாக கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் காயல் பட்டினம் நகர செயலாளர் இப்னுமாஜா, அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் முகமது நஜிப் அவர்கள் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக துணை பொதுச் செயலாளர் தைமியா, அவர்கள் ச கலந்து கொண்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்து மரக்கன்றுகள் வினியோகத்தை துவங்கி வைத்தார்.

தொடர்ந்து மாவட்ட துணைச் செயலாளர் ராசுகுட்டி,காயல் நகர பொருளாளர் மீரான், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீராசாஹிப்,நெசவு ஜமாத் தலைவர் ஹாஜி காதர் மைதீன், சமூக ஆர்வலர் அபு, ஆகியோர் மரக்கன்றுகளை வினியோகம் செய்தனர்

இந்நிகழ்ச்சியில் திரளான பொது மக்கள் ஆர்வத்துடன் மரக்கன்றுகளை பெற்றுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் நகரத் துணைச் செயலாளர்கள் அப்துர் ரஹ்மான், சிக்கந்தர் பாஷா, மற்றும் நகர அணி நிர்வாகிகள் ஜரித், மன்சூர், இர்ஷாத் அலி, பக்கீர் மைதீன், சித்திக், உள்ளிட்ட மஜக வினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#காயல்பட்டினம்_நகரம்
#தூத்துக்குடி_மாவட்டம்
17-10-2020