ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்! நாகை நாடாளுமன்ற உறுப்பினரிடம் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜ்தீன் மனு அளித்தார்!

உதயை-நாச்சிகுளத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்திருத்த நாகப்பட்டிணம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு M.செல்வராஜ் B.A., M.P, அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் சந்தித்து ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தருமாறு 5 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

மனுவைப் பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார் பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் K.முருகையன், மஜக கிளை பொருளாளர் N.சதாம் உசேன், துணை செயலாளர் இம்தியாஸ், மனிநேய கலச்சார பேரவையின் அமீரக பிரதிநிதி முஹம்மது ரசீத், யாஸர் அரபாத், அப்துல் நசீர் ஆகியோர் உடனிருந்தனர்.

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருவாரூர்_மாவட்டம்.
26-10-2021