பாரத் பந்த்! தேனியில் அனைத்து கட்சியின் சார்பில் போராட்டம்! மஜக பங்கேற்பு!


கம்பம்.டிச.8.,

மத்திய அரசின் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்தும் போராட்டம் உலகளாவிய கவனத்தை பெற்றிருக்கிறது.

அதற்கு ஆதரவாக இன்று விவசாய சங்கங்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், கட்சிகள், சேவை அமைப்புகள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மனிதநேய ஜனநாயக கட்சியினர் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதை தொடர்ந்து தேனி மாவட்டம் கம்பம் சிக்னல் பகுதியில் ஒன்றினைந்த அனைத்து கட்சியினர் விவசாய தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ரியாஸ் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் அம்ஜத் மீரான், மாவட்ட தொழிற்ச்சங்க தலைவர் தாஹா, நகர பொருளாளர் ஷாஜஹான், இளைஞரணி நிர்வாகிகள் அபு, சித்திக், நசுருதீன், மற்றும் மஜக வினர் திரளாக பங்கேற்றனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தேனி_மாவட்டம்
08-12-2020