இலங்கை கடற்படை அட்டூழியம் கோட்டைப்பட்டிணம் மீனவர் படுகொலை..! நீதி கேட்டு மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டகளத்தில் மஜக..!

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் ஒன்றிய அரசை கண்டித்து தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இலங்கை கடற்ப்படையால் தாக்கப்பட்டு, கடலில் மாயமாகி உயிரிழ்ந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள ராஜ்கிரணின் உடலை ஒப்படைக்க கோரி இலங்கை அரசையும் இந்திய ஒன்றிய அரசையும் கண்டித்தும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகிறார்கள்.

இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, கந்தர்வக் கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, மனிதநேய ஜனநாயக கட்சி மாநில விவசாய அணி செயலாளர் அப்துல் சலாம், விவசாய அணி மாநில துணை செயலாளர் சேக் இஸ்மாயில், மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஹாரிஸ், மாவட்ட பொருளாளர் சாஜிதீன், மீனவர் அணி மாவட்ட செயலாளர் ஷாஜஹான், ஒன்றிய செயலாளர் முஜிபுர் ரஹ்மான், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். மேலும் இந்த தொடர் போராட்டத்தின் கோரிக்கைகள் வெற்றி பெற வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்கள்.

உடன் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்
21.10.2021