கோவை நாசர் உடல் நல்லடக்கம்..! பெருந்திரளானோர் பங்கேற்பு..

செப்:03., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில கொள்கை விளக்க அணியின் செயலாளர் கோவை நாசர், அவர்களின் உடல் இன்று மாலை 7 மணி அளவில் குனியமுத்தூர் காளவாய் அடக்கஸ் தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக அவரது இல்லத்தின் அருகே நடைப்பெற்ற இறுதி தொழுகையில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று அவருக்காக பிரார்த்தித்தார்கள்.

மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் செய்யது முகம்மது பாரூக், கோவை சுல்தான் அமீர், ஆகியோர் தலைமையின் சார்பில் வருகை தந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.

மாநில துணைச் செயலாளர் கோவை பஷீர்,MJTS மாநில செயலாளர் கோவை ஜாபர் அலி, உள்ளிட்ட மாவட்ட, மாநகர, கிளை மஜக நிர்வாகிகளும், பொள்ளாச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கோவை வடக்கு, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், மாவட்டங்களிலிருந்தும் மஜகவினர் வருகை தந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளும், குடும்பத்தினரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினர்.

கோவையை சேர்ந்த அரசியல் கட்சியினர், பல்வேறு சமூக இயக்கங்களை சேர்ந்தவர்களும் அவரது வீட்டுக்கு வருகை தந்து தங்களின் துயரத்தை பகிர்ந்துக்கொண்டனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
03.09.2021