மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து! திருச்சியில் மஜகவின் வானொலி நிலைய முற்றுகை போராட்டம்! காவல் துறையினருடன் தள்ளு முள்ளு!

திருச்சி:ஆக:02., காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசையும்,அதற்குத் துணைபோகும் ஒன்றிய அரசையும் கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வானொலி நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட பொருளாளர் அந்தோணிராஜ், அவர்கள் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்ட செயலாளர் பேரா‌.மைதீன், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட மஜக-வினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது, பின்னர் வானொலி நிலையம் வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் சையது முஸ்தபா, சேக் அப்துல்லா நிர்வாகிகள் அன்வர், ஆரிப், சையது, சேட், மைதீன், வாஹித், அப்துல்லா, மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருச்சி_மாவட்டம்
01.08.2021