You are here

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவரின் விபத்து உதவி தொகை ₹2 லட்சம் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு…

image

image

புதுகை.பிப்14., புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒன்றிய செயலாளர் அரசர்குளம் சேக் அப்துல்லாஹ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் மரணமடைந்தார்கள் – இன்னாலில்லாஹி ….

அவர்களுக்கான மாவட்ட ஆட்சித்தலைவரின் விபத்து உதவி தொகை இரண்டு லட்சம் ரூபாய் -க்கான காசோலையை சேக் அப்துல்லாஹ்- வின் இரண்டு பெண் பிள்ளைகளிடம் மாநில செயற்குழு உறுப்பினர் அறந்தை முபாரக் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அரசர்குளம் சேக் இஸ்மாயில் ஆகியோர் ஒப்படைத்தார்கள். இதற்காக முயற்சி எடுத்து உதவி தொகை கிடைக்க வழிவகை செய்த மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி , மாவட்ட ஆட்சித்தலைவர் கனேஷ், மஜக மாவட்ட செயலாளர் துரை முகம்மது மற்றும் அறந்தாங்கி கோட்டாச்சியர் ஆகியோருக்கு சேக் அப்துல்லாஹ்-வின் தந்தை முத்தலிப் நன்றி தெரிவித்தார்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி
(MJK IT-WING)
புதுக்கோட்டை மாவட்டம்.
14.02.2017

Top