மஜக பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது முன்னிலையில் மஜகவில் இணைந்த மாற்றுகட்சியினர்..!


சென்னை.பிப்.14.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு மாற்றுக் கட்சியை சேர்ந்த பல்வேறு தரப்பினர் தங்களை இணைத்து வருகின்றனர்.

அதன் ஒரு நிகழ்வாக செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரத்தில் உள்ள மாற்று கட்சியை சேர்ந்த தாம்பரம் ஷாஜஹான், முஸ்தபா மற்றும் சேக்தாவூத் ஆகியோர் தலைமையில் பலர் இன்று மஜக தலைமையகத்தில் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர்.

மேலும் புதிதாக இணைந்தவர்கள் மத்தியில் பேசிய பொருளாளர் அவர்கள், கட்சி பணிகளில் தீவிரமாக களப்பணியாற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

நிகழ்வின் போது பொருளாளர் உடன் மாநில துணை பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜிந்தா மதார் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் அல்தாப், பொருளாளர் ஆலந்தூர் சலீம், மாவட்ட துணைச் செயலாளர்கள் தாம்பரம் ஜாகிர், ECR சமது உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#செங்கை_வடக்கு_மாவட்டம்
14-02-2021

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.