சிம்புவுக்கு மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி நன்றி !

பிப்.03., ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு குறித்த அவதூறுக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சிம்பு கருத்து கூறியது அனைவராலும் பாராட்டப்படுகிறது .

இது குறித்து அலைபேசியில் சிம்புவிடம் பேசிய பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் , ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு வலுசேர்த்ததற்கும் , இதை மதரீதியாக கொச்சைப்படுத்தியவர்களை கண்டித்து கருத்து கூறியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் .

இதற்கு சிம்பு அவர்கள் , தான் உண்மைக்கு ஆதரவாக பேசியதாகவும் , இதனால் ஒரு மதவெறி அமைப்பு தனக்கு கண்டனம் தெரிவித்ததாகவும் , தான் இறைவனுக்கு மட்டுமே பயப்படுவேன் என்றும் , தான் அனைத்து மதங்களையும் மதிக்கும் தமிழன் என்றும் கூறினார் .

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING)
சென்னை.
03.02.17