MLA அவர்களுக்கு நாகை தொகுதி மக்கள் நன்றி!

image

#M_L_A_அவர்களுக்கு…
#நாகை_தொகுதி_மக்கள் #நன்றி!

பிப்.03., காரைக்கால் மார்க் துறைமுகத்திற்கு எதிராக சட்டசபையில் பேசியதற்கு நாகை தொகுதி மக்கள் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு தொடர்ந்து நன்றிகளையும், பாராட்டுகளையும் நேரிலும், அலைபேசியிலும் தெரிவித்து வருகின்றனர்.

இன்று நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு நேரில் வந்து MLA அவர்களை நாகூர் வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் நாகூர் சமூக ஆர்வலர்கள் அமைப்பு ஆகியவற்றை சேர்ந்தவர்கள் நன்றி பாராட்டினர்.

இன்று நாகூர் செய்யது பள்ளிக்கு ஜும்மா தொழுகைக்கு சென்ற போது அங்கும் நேரில் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.

மேலும் செய்யது பள்ளி நிர்வாகத்தின் சார்பாக பாராட்டி சால்வை அணிவித்தனர்.

பனங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
திருமதி. நந்தினி முத்தழகன் சார்பில் நன்றி தெரிவித்து, பாராட்டி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கிறது. அதுபோல் பட்டினச்சேரி மீனவ மக்களும் நேரில் வந்து நன்றி கூறினர்.

நாகூர் முஸ்லிம் சங்கம்,
தர்கா ஆலோசனைக்குழு, வர்த்தக சங்க தலைவர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள், தொழிலதிபர்கள், கேபிள் டி.வி. சங்க நிர்வாகிகள், வெளிநாடு வாழ் நண்பர்கள் மற்றும் முன்னாள் ஜமாத் நிர்வாகிகள் சார்பாக வாழ்த்து தெரிவித்து டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

தகவல்;

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
03.01.17