டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சி மஜகவினர் ஆர்ப்பாட்டம்!


ஜன.10,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் விவசாய சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அரசமரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

பகுதி பொறுப்பாளர் சையது முஸ்தபா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் பேரா.மைதீன் அப்துல் காதர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

தலைமைச் செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம் ஷா கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் சட்டத்தை கண்டித்து பேசினார்.

இந்நிகழ்வில், மஜக நிர்வாகிகள் முகமது பீர்ஷா, அந்தோணிராஜ், சேக் அப்துல்லா, கமால், ஆரிப், முபாரக், ஷேக் மைதீன், சையது முகம்மது, அன்வர், வாகித், ஜாகீர், ஜோயல் உள்பட மஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்.