மஜக திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம்! மாநில பொருளாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!


திருப்பூர்: ஜன.07

திருப்பூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழு கூட்டம் 01.01.2021 அன்று மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது, அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, அவர்கள் பங்கேற்றார்.
அவருடன் துணை பொதுச் செயலாளர்கள் சையது அஹமது பாரூக், கோவை சுல்தான் அமீர், ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட முன்னாள் செயலாளர் ஹைதர் அலி,அவர்கள் மீது ஒரு வழக்கு தொடர்பாக கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆனால் அதை காரணமாக வைத்து திருப்பூர் காவல்துறை அவர் மீது தொடர்ந்து பொய் வழக்குகளை பதிவு செய்ய முயற்சிக்கும் காவல் துறையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிடுவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் மாவட்ட நிர்வாகம் கலைக்கப்பட்டு பொறுப்புக் குழு அமைக்கப்பட்டு பொறுப்புக்குழு நிர்வாகிகளாக முஸ்தாக் அகமது, இக்பால், முஜிபூர் ரகுமான், ராயல் பாஷா, கண்ணன், பாபு, மஜீத், ஆகியோரை நியமனம் செய்ய தலைமைக்கு பரிந்துரைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால், மாவட்ட துணைச் செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அபுதாஹிர், பொருளாளர் சேக் ஒலி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அஸ்கர், மாவட்ட துணைச் செயலாளர்கள் சதாம் உசேன், அபுதாஹிர்,
மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளஃபல் ரிஸ்வான், மாவட்ட பொருளாளர் ஆசிக், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் காதர்கான், மற்றும் நகர, ஒன்றிய, கிளை, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பூர்_மாவட்டம்
01-01-2021