நாகையில் மீன்வள பல்கலைகழக திறப்பு விழா..!

நாகை. ஜூன்.20., நாகப்பட்டினத்தில் #மீன்வள பல்கலைக்கழத்தின் நிர்வாக தலைமை அலுவலக கட்டிடத்தை காணொலி மூலம் #முதல்வர்_எடப்பாடியார் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி, பல்கலைக்கழக துணைவேந்தர் ஃபிலிக்ஸ், பல்கலைகழக இயக்குனர்களில் ஒருவரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காணொலி காட்சியின்போது முதல்வருடன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களும், கைத்தறி துறை அமைச்சர் ஓ.ஸ்.மணியன் அவர்களும் பங்கேற்றார்.

ஆசியாவிலேயே மீன்வளத்திற்கான பல்கலைகழகம் இங்கு மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்:
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்
#நாகபட்டினம்.
20/06/2018