பாபநாசத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக மஜக கண்டன ஆர்ப்பாட்டம்!


ஜன.05,
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் விவசாயிகளை அடிமைப்படுத்தும் வேளாண் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் பாபநாசம் மேலவீதி அண்ணாசிலை அருகில் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் நடைப்பெற்றது.

இப்போராட்டத்தில் மாநில கொள்கை விளக்க அணியின் துணைச் செயலாளர் காதர் பாட்சா, மாநில மருத்துவ சேவை அணி துணை செயலாளர் முஹம்மது மஃரூப், இந்திய கம்யூனிஸ்ட் தில்லைவனம், MJVS மாநில செயலாளர் யூசுப் ராஜா ஆகியோர் வேளாண் சட்டங்களை கண்டித்து பேசினர்.

இதில் மாவட்ட செயலாளர் ஹ.சேக் முஹம்மது அப்துல்லாஹ், பொருளாளர் குடந்தை நிஜாம், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட், மாவட்ட துணைச் செயலாளர்கள் முஹம்மது இப்ராஹிம்,
இப்ராஹிம் ஷா, மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது அலி, அய்யம்பேட்டை நகர செயலாளர் சேக் ஆகியோர் முன்னிலை வகிக்க ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும், தோழமை கட்சியினரும் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்.
04.01.2021