நாச்சிகுளத்தில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்! மாநில செயலாளர் தாஜூதீன் பங்கேற்பு!!


ஜன.02,
மனிதநேய ஜனநாயக கட்சியின் 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்க்கையின் இறுதிகட்ட முகாம் நேற்று நாச்சிகுளத்தில் ஜூம்ஆ பள்ளிவளாகம் மற்றும் நாச்சிகுளம் கடைவீதி இரயில்வே கேட் அருகிலும் கிளை செயலாளர் ரியாஸ் அகமது தலைமையில் நடைப்பெற்றது.

இரண்டு இடங்களில் நடைப்பெற்ற முகாமை மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் பங்கேற்று துவக்கி வைத்தார்.

இரவு 8 மணி வரை தொடர்ந்த இம்முகாமில் இளைஞர்கள், மாணவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் உள்பட நூற்றுகணக்கானோர் பதிவேட்டை பூர்த்தி செய்து தங்களை மஜகவில் உறுப்பினராக இணைத்துக் கொண்டுள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை மஜக நிர்வாகிகள் இம்தியாஸ், இஜாஸ், இம்ரான், ஹாரீஸ், ஹஜ்ஜி தம்பி, ரியாஸ்தீன், ஜியாவுதீன், நிஸான் ஜான்முகமது, KPN கபீர் உள்ளிட்டோர் சிறப்புடன் செய்திருந்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.
01.01.2021