மஜகவில் இணைந்த உறவுகள் கோவில் வாசலில் நடைபெற்ற உறுப்பினர் சேர்கை நிகழ்ச்சி.!!


ஜன.01.,

பெரம்பலூர் மாவட்டம் வடக்கலூர் அகரம் கிராமத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மகத்தான மக்கள் சேவைகளால் ஈர்க்கப்பட்டு பல்வேறு சமூகங்களைச் சார்ந்த உறவுகள் தங்களை மஜகவில் பேரார்வத்துடன் இணைத்து கொண்டனர்.

ஊர் கோவில் வாசலில் வைத்து நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டப்பொருளாளர் ராஜ்மோகன் தலைமை தாங்க, மாவட்ட செயலாளர் தாளம்பாடி முஜிப் ரஹ்மான் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கலூர் அகரம் கிராமத்தை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர்.

வெறுப்பு அரசியலை வேரறுத்து நல்லிணக்க அரசியலை முன்னெடுக்கும் மஜகவின் பணிகளுக்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரமாக இது உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் T.S.தமிமுன் அன்சாரி, K அப்துல் ரஹ்மான், முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆசப் ராஜா, வழக்கறிஞர் ராகுல்காந்தி, அகரம் அறிவழகன், அகரம் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#பெரம்பலூர்_மாவட்டம்
31-12-2020