MKP கத்தார் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்..!



கத்தார்.டிச.19.,

கத்தார் தேசிய தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்த தான முகாம் ஷேக் அலாவுதீன் தலைமையில் (18-12-2020) அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வை கத்தாரிலுள்ள இந்திய தூதரகத்தின் கிளை அமைப்பான ICBF-யின் தலைவர் திரு.பாபுராஜன் அவர்கள் இரத்ததான முகாமை துவக்கிவைத்தார்.

உடன் சிறப்பு அழைப்பாளராக QMF கத்தார் தலைவர் கடலூர் முஸ்தஃபா கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியை தலைமை செயற்குழு உறுபினர் கீழக்கரை ஹூசைன், உத்தமபாளையம் உவைஸ், திருப்பத்தூர் நிஸார், சிதம்பரம் நூர், மாயவரம் பாபு, மேலப்பாளையம் ( ஜூபைர், ஃபத்தாஹ், இக்பால் ) ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் கத்தார் விசிக நிர்வாகிகள், கத்தார் தமஜக தலைவர் KST அஜீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தன்னார்வத்துடன் முன்வந்து இரத்த தானம் செய்தனர்.

தகவல்;
#MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MKPITWING
#கத்தார்_மண்டலம்
18-12-2020